Posts

நீங்களும் ஜெயிக்கலாம்

பல சமயங்களில் உங்களுடைய ஆற்றல் உங்களுக்கே தெரிவதில்லை . கை நிறையக் காசு வைத்திருக்கிறவன் மட்டும் பணக்காரன் அல்ல , நல்ல மூளை / சிந்தனைத் திற ன் , கடினமான உடல் உழைப்பு , எப்போதும் உற்சாகமாக சிரித்தபடி வேலை பார்ப்பது , நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்வது ... இவை ஒவ்வொன்றும் பெரிய சொத்து கள்தாம் . ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு நெகட்டிவ் குணங்கள் : ஆசை , கோபம் , பொறாமை , தற்பெருமை , கர்வம் , அதீத சந்தோஷம் . எதிலும் வெற்றி பெறுவதற்கு மூன்று வழிகள் உண்டு : நம் உடல் பலத்தை அல்லது மூளைத் திறனைக் கொண்டு ஜெயிக்கலாம் , நல்ல திறமைசாலிகளைக் கூட்டணி சேர்த் துக்கொண்டு ஜெயிக்கலாம் , இவை இரண்டும் சாத்தியப்படாவிட்டால் , வெறும் மன தைரியத்தைக் கொண்டே ஜெயிக்கலாம் . உங்களுக்கு இதில் எது பொருந்தும் என்று   யோசித்துப் பயன்படுத்துங்கள் . எப்போதும் உற்சாகமாக இருக்க நான்கு விஷயங்கள் தேவை . முதலில் , எதையும் எதிர்கொண்டு சந்திக்கிற தைரியம் வேண்டும் . அடுத்து , நாம் இப்போது இருக்கிற   நிலைமை போதாது , இன்னும் உயரத்துக்குச்

முந்தி இருப்பச் செயல்

பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்கையில் பெரிய கனவாக இருப்பது பிள்ளைகளின் எதிர்காலம்தான். பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் ,எப்படி வரவேண்டும் என்ற கனவுகளும்,திட்டங்களும் இல்லாத பொறுப்புள்ள பெற்றோர் யாருமில்லை .வாழ்க்கை சூழலில் இந்த கனவுகளுக்கும்,திட்டங்களுக்கும் நடைமுறை சிக்கல்களும் ஏமாற்றங்களும் வருவது ஒருபுறம். இந்த கனவுகளும் திட்டங்களும் சரியானதுதானா? நியாயமானதுதானா ? ஆதாரமாக சிந்திக்கவேண்டிய விடயம். இந்த கனவுகள் பொதுவாக பொருளாதார ரீதியாக வாழவைக்க என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. டாக்டராகவோ, பெரிய பொறியாளராகவோ , கணக்கு தனிக்கையாளராகவோ(Auditor), இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை(IPS) போன்ற பதவிகள் வகிக்கவேண்டும் என்ற கனவுகளோடுதான் அநேகமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதற்காக பெற்றோர்கள் சந்திக்கும் தடைகளும் , விதிமீறல்களும் எத்தனை? கனவுகளை அடைய தகுதிக்கு மீறிய செலவுகளுக்கு கடன்வாங்கி வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் ?இத்தனை செய்தும் அவர்கள் கனவுகள் முற்றுப்பெராமல் போனவர்கள் எத்தனை பேர்? இந்த எலிப்பந்தயத்தில்(Rat Race) கூட்டத்தோடு பொதுப்புத்தி கொண்டு ஓடத்தொ

மனிதம்

Image
பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும்.                                                 1 தமிழகம் முழுவதும் மழைபெய்யும் காலத்தில் இங்கு மழை பெய்யாது. டிசம்பர் கடைசியில்தான் சரியான மழைக்காலம் ஆரம்பிக்கும். சில பத்தாண்டு இடைவெளியில் பிரளயம் போன்ற பெருமழை புயலுடன் வரும் . அப்படி ஒருபுயல்தான் தனுஷ்கோடியை கடலுக்குள் கொண்டுபோனது .அதுபோன்ற பெரும் புயலும் மழையும்தான் அந்த டிசம்பரில் வந்தது. அது தனுஷ்கோடி புயலுக்கு ஒரு பத்து ஆண்டுகள் முன்பு. கல்குளம் மண்குளம் என்று இரண்டு குளங்கள் அடுத்தடுத்து இருக்கும். ஒருவாரம் விடாது பெய்த இந்த மழையில் இரண்டு குளங்களும் நிரம்பி, ஒருகுளமாகிவிட்டிருந்தது.கல்குளத்தின் பக்கசுவர்கள் படித்துறை எல்லாம் மூடி நிரம்பி விட்டது. நூர் முஹம்மது மரைக்காயரின் ஆசாரம் என்று சொல்லப்படும் வீட்டின் வாசல் படிக்கட்டுவரை தண்ணீர் வந்துவிட்டது. இருகுளங்களும்,நூர்முஹம்மது மரைக்காயரின் ஆசாரமும், குளங்களின் பின்னால் இருக்கும் மணல்மேடும் விளையாட்டுத்திடலும் , அதை ஒட்டிய வாலிபர் சங்கமும் எல்லாம் சேர்ந்து பொதுவில் குளத்துமேடு என்று அழைக்கப்பட்டது.குலத்துமேட்டின் பெரும்பகுதியை